விருச்சிகம் ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
viruchagam1.jpg

இந்த ராசியின் அதிபதி, செவ்வாய் பகவான் ஆவார். இவர்களை இவர்களுடைய கணவன் அல்லது மனைவியாலேயேப் புரிந்து கொள்வது கடினமான விஷயமாகும். அந்த அளவிற்கு ஒரு வித வித்யாசமான, மனதினை உடையவர்கள். சிரித்துக் கொண்டே கோபமும்படுவார்கள். அழுது கொண்டே, சமாதானமும் கூறுவார்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு, அதிக அளவிலான காதல் தோல்விகள், அல்லது க்ரஷ் என அழைக்கப்படும் விருப்பம் இருக்கும். இவர்களுக்கு தொட்டுத் தடவுவதுப் பிடித்த விஷயமாகும். இவர்களை யாராவது தடவிக் கொடுத்தால், நாய்குட்டிப் போல, மடியில் படுத்துத் தூங்கிவிடுவார். பின் குறிப்பு( கணவன், மனைவி, தாய், தந்தை தடவிக்கொடுத்தால், தூங்கிவிடுவர், மற்றவர்கள் தொட்டால், ஹாஹாஹா அவ்வளவுதான்).

இவர்களுடையப் பலவீனம். இவர்களைத் தொடுவது. இவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள், இவர்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என, இவர்கள் நினைப்பர். இவர்களை அவர்கள் கொஞ்சிக் கொண்டே இருக்க வேண்டும். இவர்களை தடவிக் கொடுத்துக் கொண்டே, இருக்க வேண்டும் எனவும் விரும்புவர்.

விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில், தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது, அதிர்ஷ்டம் உண்டாக்கும்.

2.தினமும் காலையில், கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.

3.அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.

4.செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.

5.சிகப்பு நிற கர்ச்சீப், டை ஆகியவற்றைப் பயன்படுத்துவது, நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.

6.பால் காய்ச்சும் பொழுது, பொங்கி வடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

7.இனிப்பு ரொட்டி செய்து, சாதுக்கள் மற்றும் மகான்களுக்கு வழங்கலாம்.

8.யாரிடம் இருந்தும், எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள். அப்படிப் பெற்றால், அதற்குப் பதிலாக, ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.

9.செவ்வாய்க் கிழமை அன்று தேன், குங்குமம் மற்றும் சிகப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட, துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.

10.செவ்வாய்க் கிழமைகளில், இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது, வாழ்வில் வளம் சேர்க்கும்.

11.சகோதர்களின் மனைவியுடன் சண்டை போடாமல், பார்த்துக் கொள்ளுங்கள்.

12.மூத்த சகோதரரிடம், மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்.

13.செவ்வாய்க் கிழமைகளில், ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை, கடன், நோய்கள் நீங்கி, நல்வாழ்வு கிட்டும்.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.