விகாரி வருட ராசிபலன் துலாம் 2019-2020

24 October 2019 ராசிபலன்
thulam.jpg

துலாம் ராசியானது, ராசிக்கட்டத்தில் ஏழாம், ராசியாகும். இது ஒரு ஆண் ராசி. இது ஒரு காற்று ராசியும் கூட. இதன் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். இந்த விகாரி தமிழ் புத்தாண்டில், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என மாபெரும் கோள்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த தமிழ் புத்தாண்டு மே 15 வரை குரு பகவான், சனி மற்றும் கேது பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தை தனுசு ராசியில் உண்டு பண்ண உள்ளார். இது உங்கள் ராசிக்கு மூன்றாவது, இடமாகும். மே 15க்குப் பின் மீண்டும், விருச்சிக ராசிக்கே, சென்று விடுகிறார். பின்னர், அக்டோபர் மாதம் 28ம் தேதி, தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

அங்கு சனி பகவான் மற்றும் கேது பகவானுடன் இணைந்து மீண்டும் குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ண உள்ளார். அதே போன்று, சனி பகவான் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ஆக மொத்தம், இந்த விகாரி வருடத்தில் கிட்டத்தட்ட, இரண்டு மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சிகள், நடைபெறுகின்றன.

சரி, இந்த விகாரி வருடத்தில், உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்றுப் பார்ப்போம். ஆண்டு தொடக்கத்தில் மூன்று பெரும் கோள்களான, கேது, சனி மற்றும் குரு ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர்.

ஏப்ரல் முதல் மே வரை குரு பகவான், சனி பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் ஒன்றாக, தனுசு ராசியில் இருக்கின்றனர். ராகு பகவான், தொடர்ந்து உங்கள் ராசியிக்கு ஒன்பதாம், இடத்தில் இருக்க உள்ளார். மற்ற கிரகங்கள், அதன் காலத்திற்கு ஏற்றபடி, சுழன்று கொண்டே இருக்க உள்ளன.

தனுசு ராசி ஒரு மூல ராசியாகும். இதனை உபய ராசி என அழைப்பர். இந்த உபய ராசியில் மாபெரும் கிரகங்கள், முதல் மாதம் இருக்கின்றன. இவைகளின் சேர்க்கை, குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ணும். மேலும், குருவின் பார்வையால், முதல் மாதம், ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். இந்த குரு சண்டாள யோகம், மீண்டும், தீபாவளிக்குப் பின்பு, ஆரம்பிக்கும்.

மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த கிரகங்களால், உங்கள் இளைய சகோதர, சகோதரிகள் ஆன்மீகத்தில் அதீத ஈடுபாட்டுடன் செயல்படுவர். தைரியம் கிட்டத்தட்ட காலியானதாக நீங்களே உணர்வீர்கள். மனதில் ஒருவித கலக்கம் இருக்க வாய்ப்புகள் உண்டு. இவை அனைத்தும், 2020ல் நடக்கும் சனிப்பெயர்ச்சிக்குப் பின், மாறும்.

ராகு பகவான், உங்கள் ராசிக்கு 9ல் இருக்கின்றார் இது உபய ராசி மட்டுமல்ல, காற்று ராசியும் கூட. இதனால், உங்கள் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைப்பதில், சிக்கல்கள் ஏற்படும். நீங்கள் செய்யும் காரியங்களில், சில தடைகள், பிரச்சனைகள் ஏற்படலாம்.

மனதில் விரக்தியினை உணர்வீர்கள். உங்களுக்கு, மனப்பிரச்சனை மட்டுமே, இந்த ஆண்டு அதிகமாக ஏற்படும். எனவே, மனதினை தெளிந்த நீரோடைப் போல, சாந்தமாக, அமைதியாக வைத்துக் கொள்ளவும். இந்தப் பிரச்சனைக்கான பரிகாரம் ஒன்றே ஒன்று தான். இராமேஷ்வரம் சென்று நீராடி வரவும்.

மே மாதத்திற்குப் பின், ராகு பகவான், மிகவும் பலமடைகின்றார். இதனால், நீங்கள் சற்றுக் கவனமுடன் இருந்தாலே, பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடாலம். எதை செய்தாலும், திருட்டு வழியில், அல்லது குறுக்கு வழியில் செய்ய வேண்டாம். கஷ்டமாக இருந்தாலும், நேர் வழியிலேயே செய்யவும்.

சுக்கிரன் ஆண்டு முழுக்க, நல்ல நிலைமையிலேயே இருக்கின்றார். இதனால், பெண்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். மே மாதத்திற்குப் பிறகு, குரு பகவான் மீண்டும், இரண்டாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், நல்ல வருமானம் உண்டாகும். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. பொன், பொருள், வாகனம் முதலியன வாங்கும் வாய்ப்புகள், ஒரு சிலருக்குக் கிடைக்கும்.

தீபாவளி வரை, குரு பகவான் தொடர்ந்து இதே நிலையில், இருக்க உள்ளார். மேலும், தீபாவளிக்குப் பிறகு வரும் குருப்பெயர்ச்சியின் காரணமாக, குரு பகவான் சர்வ வல்லமையுடன், தன்னுடைய முதல் ஆட்சி வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைகின்றார். அங்கு அவ்வாறு இணைந்தாலும், தன்னுடைய வீட்டிற்கு செல்வதால், கெடுதல்களை செய்யவிட மாட்டார்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சியினால், ராகுவினால், ஏற்படும் பாதிப்புகளும் குறையும். மேலும், 2020ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியினால், சனி பகவான் உங்கள் நான்காம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், உங்களுக்கு கிடைக்கும் சுகமான உணவு, உடை மற்றும் உறக்கம் ஆகியவை கிடைப்பதில், சிறு சிறு தடைகள் உண்டாகும். கடினமாக உழைத்தாலும், சுமாரான அளவிலான சுகமே கிடைக்கும்.

பண வரவு இந்த ஆண்டும், தற்பொழுதுள்ள நிலையே நீடிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி ஆகியவை நன்றாகவே இருக்கும்.

ஆக மொத்தம், இந்த விகாரி ஆண்டு, உங்கள் துலாம் ராசிக்கு நூற்றுக்கு 83% நன்றாகவே உள்ளது. மேலும், பல நன்மைகள் நடக்க, முதலில் உங்கள் குல தெய்வத்தை வணங்கவும். பின்னர், சக்தியையும், நரசிம்மரையும் வணங்கி வர, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.