விகாரி வருட ராசிபலன் மேஷம் 2019-2020

24 October 2019 ராசிபலன்
mesham.jpg

மேஷ ராசியானது ராசிக்கட்டத்தில் முதல் ராசியாகும். இது ஒரு ஆண் ராசி. இது ஒரு நெருப்பு ராசியும் கூட. இதன் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இந்த விகாரி தமிழ் புத்தாண்டில், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என மாபெரும் கோள்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த தமிழ் புத்தாண்டு மே 15 வரை குரு பகவான், சனி மற்றும் கேது பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தை தனுசு ராசியில் உண்டு பண்ண உள்ளார். இது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமாகும். மே 15க்குப் பின் மீண்டும், விருச்சிக ராசிக்கே சென்று விடுகிறார். பின்னர், அக்டோபர் மாதம் 28ம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அங்கு சனி பகவான் மற்றும் கேது பகவானுடன் இணைந்து மீண்டும் குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ண உள்ளார்.

அதே போன்று, சனி பகவான் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ஆக மொத்தம், இந்த விகாரி வருடத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

சரி, இந்த விகாரி வருடத்தில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்றுப் பார்ப்போம். ஆண்டு தொடக்கத்தில் மூன்று பெரும் கோள்களான, கேது, சனி மற்றும் குரு ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர். உங்கள் ராசியிலேயே சூரியன் இருக்கின்றார். செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருக்கின்றார்.

ஏப்ரல் முதல் மே வரை குரு பகவான், சனி பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் ஒன்றாக, தனுசு ராசியில், மேஷ ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கின்றனர். ராகு பகவான், தொடர்ந்து மூன்றாம் இடத்திலேயே, இருக்க உள்ளார். மற்ற கிரகங்கள் அதன் காலத்திற்கு ஏற்றபடி, சுழன்று கொண்டே இருக்க உள்ளன.

தனுசு ராசி ஒரு மூல ராசியாகும். இதனை உபய ராசி என அழைப்பர். இந்த உபய ராசியில் மாபெரும் கிரகங்கள் முதல் மாதம் இருக்கின்றன. இவைகளின் சேர்க்கை, குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ணும். மேலும், குருவின் பார்வையால், முதல் மாதம், ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். இந்த குரு சண்டாள யோகம், மீண்டும், தீபாவளிக்குப் பின்பு, ஆரம்பிக்கும்.

ஆண்டு தொடக்கத்தில் உங்கள் ராசி அதிபதியான செவ்வாய் பகவான், உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்க உள்ளார். இதனால், உங்கள் இளைய சகோதர, சகோதரிகளின் மூலம் நல்ல பண வரவு உண்டாகும். மேஷம் ஒரு நெருப்பு ராசி அதே சமயம் ஒரு சர ராசியும் கூட. ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிரகம் கூட சர ராசியில் இல்லை. ஆனால், ராஜ கிரகங்களான, சனி, குரு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் நெருப்பு ராசியில் சஞ்சரிக்கின்றன.

இந்த சஞ்சாரம் உங்களுக்கு வலிமையைத் தரும் அமைப்பாகும். இந்த மூவரும் கூடியிருப்பது உங்கள் தந்தையை குறிக்கக் கூடிய ஒன்பதாவது வீட்டில். இதன் காரணமாக, உங்கள் தந்தையின் உடல்நலத்தில் அக்கறைத் தேவை. அதே சமயம், உங்கள் தந்தை புதியதாக தொழில், அல்லது ஏதேனும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்ந்து மே மாதம் வரை நீடிக்கும். ராகு பகவான், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில், உபய ராசியில், காற்று ராசியில் இருக்கிறார்.

இதனால், உங்களுக்கு ஒருவித அசட்டுத் துணிச்சல் உண்டாகும். குறிப்பாக, தொழில் நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு அதீத தைரியம் வரும். அதே சமயம், நல்ல வெற்றிகளும் குவியும். இருப்பினும், நீங்கள் கவனமாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த வெற்றியைக் கொடுப்பவர் ராகு. முதல் மாதம் குருவின் பார்வையப் பெறுவதால், ராகுவால் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது.

ஆனால், முதல் மாதம் முடிந்த பின்பு, அதாவது மே மாதத்திற்குப் பின், ராகு பகவான், மிகவும் பலமடைகின்றார். இதனால், நீங்கள் தேவையற்றப் பிரச்சனைகளில் ஈடுபட வேண்டாம். நண்பர்களிடமே, உறவினர்களிடமோ அல்லது சகோதர, சகோதரிகளிடமோ வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.

சுக்கிரன் ஆண்டு முழுக்க நல்ல நிலைமையிலேயே இருக்கின்றார். இதனால், பெண்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். மே மாதத்திற்குப் பிறகு, குரு பகவான் மீண்டும், எட்டாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். அவர் எட்டாம் இடத்தில் இருப்பதால், வாயு சம்பந்தமான தொல்லை, உடலில் தேவையற்ற நீர் சேருதல் போன்றப் பிரச்சனைகள் ஏற்படலாம். குரு அங்கு உங்கள் ராசிக்கு நன்மை அளிக்கும் வகையிலேயே உள்ளார். எனவே பயப்பட வேண்டாம்.

தீபாவளி வரை, குரு பகவான் தொடர்ந்து இதே நிலையில், இருக்க உள்ளார். மேலும், தீபாவளிக்குப் பிறகு வரும் குருப்பெயர்ச்சியின் காரணமாக, குரு பகவான் சர்வ வல்லமையுடன், தன்னுடைய முதல் ஆட்சி வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைகின்றார்.

அங்கு அவ்வாறு இணைந்தாலும், தன்னுடைய வீட்டிற்கு செல்வதால், கெடுதல்களை செய்யவிட மாட்டார். மேலும், இந்த சமயத்தில், நீங்கள் ஏதேனும், தவறு செய்தீர்கள் என்றால், கண்டிப்பாக, மாட்டிக் கொள்வீர்கள். எனவே, தேவையற்ற, தகாத, அரசுக்குப் புரம்பான, சட்டத்திற்கு விரோதமான வழிகளில் செல்ல வேண்டாம். குருவின் பார்வையை உங்கள் ராசி பெறுவதால், உங்களுடைய குழந்தைப் பிரச்சனைத் தீரும். நீண்ட நாட்களாக, குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு, அழகிய குழந்தைகள் பிறக்கும்.

ராகுவினால், ஏற்படும் பாதிப்புகளும் குறையும். மேலும், 2020ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியினால், சனி பகவான் உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், வேலையில் சிறு தொய்வு ஏற்படும். ஆனால், பயப்படும் படி, ஏதும் இருக்காது. சற்று மந்த நிலை காணப்படும். தொழிலில் கடினமாக உழைக்க வேண்டி வரும். இருப்பினும், தொழில் வளர்ச்சி படிப்படியாக, நிதானமாக இருக்கும்.

தொழிலில் உங்களுக்கு ஏதேனும், எதிரிகள் இருந்தால், அவர்கள் இந்த சனிப்பெயர்ச்சிக்குப் பின், உங்களிடம் விளையாடமாட்டார்கள். வேலை தேடுபவர்கள், இந்த சனிப்பெயர்ச்சிகுப் பின், சற்று கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு இந்த ஆண்டு நன்றாகவே இருக்கும், இருப்பினும், திருமணம் போன்ற, சுப நிகழ்ச்சிகளை உங்களுடைய சொந்த ஜாதகம் பார்த்துச் செய்யவும்.

பணவரவுக்கு இந்த ஆண்டு, பஞ்சமில்லை. தற்பொழுதுள்ள நிலையே நீடிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி ஆகியவை நன்றாகவே இருக்கும்.

ஆக மொத்தம், இந்த விகாரி ஆண்டு, உங்கள் மேஷ ராசிக்கு நூற்றுக்கு 90% நன்றாகவே உள்ளது. மேலும், பல நன்மைகள் நடக்க, முதலில் உங்கள் குல தெய்வத்தை வணங்கவும். பின்னர், ஸ்ரீதுர்க்கையை வணங்கி வர, ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.