விகாரி வருட ராசிபலன் கும்பம் 2019-2020

24 October 2019 ராசிபலன்
kumbam.jpg

கும்ப ராசியானது, ராசிக் கட்டத்தில் பதினோராவது ராசியாகும். இது ஒரு ஆண் ராசி. இது ஒரு காற்று ராசியும் கூட. இதன் அதிபதி சனீஸ்வர பகவான் ஆவார். இந்த விகாரி தமிழ் புத்தாண்டில், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என மாபெரும் கோள்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த தமிழ் புத்தாண்டு மே 15 வரை, குரு பகவான், சனி மற்றும் கேது பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தை, தனுசு ராசியில் உண்டு பண்ண உள்ளார். மே 15க்குப் பின் மீண்டும், விருச்சிக ராசிக்கே, சென்று விடுகிறார். பின்னர், அக்டோபர் மாதம் 28ம் தேதி, தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

அங்கு சனி பகவான் மற்றும் கேது பகவானுடன் இணைந்து மீண்டும் குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ண உள்ளார். அதே போன்று, சனி பகவான் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ஆக மொத்தம், இந்த விகாரி வருடத்தில் கிட்டத்தட்ட, இரண்டு மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சிகள், நடைபெறுகின்றன.

சரி, இந்த விகாரி வருடத்தில், உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்றுப் பார்ப்போம். ஆண்டு தொடக்கத்தில் மூன்று பெரும் கோள்களான, கேது, சனி மற்றும் குரு ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர்.

ஏப்ரல் முதல் மே வரை குரு பகவான், சனி பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் ஒன்றாக, தனுசு ராசியில் இருக்கின்றனர். ராகு பகவான், தொடர்ந்து உங்கள் ராசிக்கு ஐந்தாம், இடத்தில் இருக்க உள்ளார். மற்ற கிரகங்கள், அதன் காலத்திற்கு ஏற்றபடி, சுழன்று கொண்டே இருக்க உள்ளன.

தனுசு ராசி ஒரு மூல ராசியாகும். இதனை உபய ராசி என அழைப்பர். இந்த உபய ராசியில் மாபெரும் கிரகங்கள், முதல் மாதம் இருக்கின்றன. இவைகளின் சேர்க்கை, குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ணும். மேலும், குருவின் பார்வையால், முதல் மாதம், ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். இந்த குரு சண்டாள யோகம், மீண்டும், தீபாவளிக்குப் பின்பு, ஆரம்பிக்கும்.

இந்த ஆண்டில், உங்கள் ராசிக்குப் பதினொன்றில், குரு, சனி மற்றும் கேது இணைந்துள்ளனர். இதன் காரணமாக, நல்ல வருமானம் உண்டாகும். நேர்மையான வழிகளில் நீங்கள் செல்வதை நினைத்துப் பெருமை கொள்வீர்கள். நினைத்தது நடக்கும். மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உற்சாகம் தலைதூக்கும்.

எதிரிகளை எளிதாக வென்றுவிடுவீர்கள். அதிக வருமானம் வரும் என எண்ணி, ஷேர் மார்க்கெட், யூக வணிகங்களில் ஈடுபட வேண்டாம். முதலில் கொடுப்பது போலக் கொடுத்து இந்த அமைப்பு ஆப்பு வைத்துவிடும். எனவே, சற்றுக் கவனமுடன், முதலீடு செய்யவும்.

குரு, தன்னுடைய சொந்த வீட்டிற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், பெரிய அளவிலான கெடுதல்கள் நேர அனுமதிக்ககமாட்டார். இருப்பினும், இருக்கின்ற இடத்திற்கு ஏற்றவாறேத் தன்னுடையப் பலன்களைத் தருவார். இந்த முறை, சனீஸ்வரன் 11ல் இருப்பது நல்லது தான். இதன் காரணமாக, உங்கள் மூத்த சகோதர, சகோதரிகளின் மூலம் நல்ல ஆதாயம் உண்டாகும். செய்யும் தொழிலில் கொஞ்சம் கொஞ்சமாக லாபம் வர ஆரம்பித்து இருக்கும்.

மே மாதம் மீண்டும், குரு பகவான், தனுசிலிருந்து, விருச்சிகத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், லாபம் வருவதற்கு குறையிருக்காது. உங்களுடையத் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

ராகு பகவான், உங்கள் ராசிக்கு 5ல் இருக்கின்றார் இது உபய ராசி மட்டுமல்ல, காற்று ராசியும் கூட. இதனால், குழந்தைப் பாக்கியம் தள்ளிப் போகும். ஒரு சிலருக்கு அவர்களுடைய சொந்த ஜாதகத்தில், ராகு உள்ள இடத்தைப் பொறுத்து குழந்தைப் பிறப்பு உண்டாகும்.

உங்கள் குழந்தைகள், போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும். குறிப்பாக, புகைப்பிடித்தல், கஞ்சா போன்ற புகை சம்பந்தப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும்.

மே மாதத்திற்குப் பின், ராகு பகவான், மிகவும் பலமடைகின்றார். இதனால், நீங்கள் சற்றுக் கவனமுடன் இருந்தாலே, பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடாலம். எதை செய்தாலும், திருட்டு வழியில், அல்லது குறுக்கு வழியில் செய்ய வேண்டாம். கஷ்டமாக இருந்தாலும், நேர் வழியிலேயே செய்யவும்.

சுக்கிரன் ஆண்டு முழுக்க, நல்ல நிலைமையிலேயே இருக்கின்றார். இதனால், பெண்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.

மேலும், தீபாவளிக்குப் பிறகு வரும் குருப்பெயர்ச்சியின் காரணமாக, குரு பகவான் சர்வ வல்லமையுடன், தன்னுடைய முதல் ஆட்சி வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைகின்றார். அங்கு அவ்வாறு இணைந்தாலும், தன்னுடைய வீட்டிற்கு செல்வதால், கெடுதல்களை செய்ய விடமாட்டார். அது உங்கள் ராசிக்கு 11ம் இடமாகும். இதன் காரணமாக, ஏற்கனவே சொன்ன, அனைத்து நன்மைகளும் உங்களுக்கு, எவ்விதத் தடையுமின்றி உண்டாகும்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சியினால், ராகுவினால், ஏற்படும் பாதிப்புகளும் குறையும். மேலும், 2020ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியினால், சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இது ஏழரைச் சனியின் முதல் அத்தியாயம் ஆகும். இது சற்று பரவாயில்லாத நிலையில் தான் இருக்கும். ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், சனீஸ்வரன் தன்னுடைய வீட்டிற்கு வருவதால், பிரச்சனைகளைத் தரமாட்டார்.

மாறாக, மற்றக் கிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கவும் மாட்டார். இவரால், நிம்மதியான உறக்கம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மன உளைச்சல் அதிகரிக்க ஆரம்பிக்கும். இருப்பினும், குருவின் நகர்வுகளும், மற்ற கிரகங்களின் பார்வையும் நன்றாக உள்ளதால், இந்த ஆண்டு நீங்கள் தப்பித்து விடுவீர்கள்.

ஆக மொத்தம், இந்த விகாரி ஆண்டு, உங்கள் கும்ப ராசிக்கு நூற்றுக்கு 77% நன்றாகவே உள்ளது. மேலும், பல நன்மைகள் நடக்க, முதலில் உங்கள் குல தெய்வத்தை வணங்கவும். பின்னர், பெருமாளையும், பின்னர் பார்வதியையும் வணங்கி வர, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.