விகாரி வருட ராசிபலன் கடகம் 2019-2020

24 October 2019 ராசிபலன்
kadakam.jpg

கடக ராசியானது ராசிக்கட்டத்தில் நான்காவது, ராசியாகும். இது ஒரு பெண் ராசி. இது ஒரு நீர் ராசியும் கூட. இதன் அதிபதி சந்திர பகவான் ஆவார். இந்த விகாரி தமிழ் புத்தாண்டில், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என மாபெரும் கோள்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த தமிழ் புத்தாண்டு மே 15 வரை குரு பகவான், சனி மற்றும் கேது பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தை தனுசு ராசியில் உண்டு பண்ண உள்ளார். இது உங்கள் ராசிக்கு ஆறாம் இடமாகும். மே 15க்குப் பின் மீண்டும், விருச்சிக ராசிக்கே சென்று விடுகிறார். பின்னர், அக்டோபர் மாதம் 28ம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

அங்கு சனி பகவான் மற்றும் கேது பகவானுடன் இணைந்து மீண்டும் குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ண உள்ளார். அதே போன்று, சனி பகனவான் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். ஆக மொத்தம், இந்த விகாரி வருடத்தில் கிட்டத்தட்ட, இரண்டு மாபெரும் கிரகங்களின் பெயர்ச்சிகள், நடைபெறுகின்றன.

சரி, இந்த விகாரி வருடத்தில், உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்றுப் பார்ப்போம். ஆண்டு தொடக்கத்தில் மூன்று பெரும் கோள்களான, கேது, சனி மற்றும் குரு ஆகியோர் ஒன்றாக இருக்கின்றனர்.

ஏப்ரல் முதல் மே வரை குரு பகவான், சனி பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் ஒன்றாக, தனுசு ராசியில் இருக்கின்றனர். ராகு பகவான், தொடர்ந்து உங்கள் ராசியிலேயே, இருக்க உள்ளார். மற்ற கிரகங்கள், அதன் காலத்திற்கு ஏற்றபடி, சுழன்று கொண்டே இருக்க உள்ளன.

தனுசு ராசி ஒரு மூல ராசியாகும். இதனை உபய ராசி என அழைப்பர். இந்த உபய ராசியில் மாபெரும் கிரகங்கள் முதல் மாதம் இருக்கின்றன. இவைகளின் சேர்க்கை, குரு சண்டாள யோகத்தை உண்டு பண்ணும். மேலும், குருவின் பார்வையால், முதல் மாதம், ராகுவால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். இந்த குரு சண்டாள யோகம், மீண்டும், தீபாவளிக்குப் பின்பு, ஆரம்பிக்கும்.

கடகம் ஒரு நீர் ராசி அதே சமயம், ஒரு சர ராசியும் கூட. ஆண்டு ஆனால், ராஜ கிரகங்களான, சனி, குரு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் நெருப்பு ராசியில், அதுவும் உபய ராசியில் சஞ்சரிக்கின்றன.

இந்த சஞ்சாரம் உங்களுக்கு வலிமையைத் தரும் அமைப்பாகும். இந்த அமைப்பால், திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, நல்ல திருமண வரம் அமையும். குறிப்பாக, சனிப்பெயர்ச்சிக்குப் பின் சிறப்பான வாழ்க்கைத் துணை வரனாக அமையும் என்பதில், மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம், தொழிலில் மட்டுமல்ல, வாழ்க்கையின் மற்ற அனைத்து விஷயங்களிலும், ஆண்களாக இருந்தால், பெண்களாலும், பெண்களாக இருந்தால், ஆண்களாலும், பல நன்மைகள் ஏற்படும்.

ராகு பகவான், உங்கள் ராசிக்கு 12ல் இருக்கின்றார் இது உபய ராசி மட்டுமல்ல, காற்று ராசியும் கூட. இதனால், உடலில் வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அலைச்சல் அதிகமாகும். நிம்மதியான தூக்கம் கிடைப்பதில், சிக்கல்கள் ஏற்படும்.

மே மாதத்திற்குப் பின், ராகு பகவான், மிகவும் பலமடைகின்றார். இதனால், நீங்கள் சற்றுக் கவனமுடன் இருந்தாலே, பிரச்சனைகளில் இருந்து தப்பித்துவிடாலம். எதை செய்தாலும், திருட்டு வழியில், அல்லது குறுக்கு வழியில் செய்ய வேண்டாம். கஷ்டமாக இருந்தாலும், நேர் வழியிலேயே செய்யவும்.

சுக்கிரன் ஆண்டு முழுக்க, நல்ல நிலைமையிலேயே இருக்கின்றார். இதனால், பெண்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். மே மாதத்திற்குப் பிறகு, குரு பகவான் மீண்டும், ஐந்தாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதனால், கடன் தொல்லை தீரும். எதிரிகளால் பெரிய அளவிலான தொல்லைகள் இருக்காது.

தீபாவளி வரை, குரு பகவான் தொடர்ந்து இதே நிலையில், இருக்க உள்ளார். மேலும், தீபாவளிக்குப் பிறகு வரும் குருப்பெயர்ச்சியின் காரணமாக, குரு பகவான் சர்வ வல்லமையுடன், தன்னுடைய முதல் ஆட்சி வீடான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைகின்றார். அங்கு அவ்வாறு இணைந்தாலும், தன்னுடைய வீட்டிற்கு செல்வதால், கெடுதல்களை செய்யவிட மாட்டார். தனுசு ராசி உங்கள் ராசிக்கு, ஆறாம் வீடாக உள்ளது. இதன் காரணமாக, நீங்கள் யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். திடீர் அதிர்ஸ்ட வாய்ப்புகளும் உண்டாகும். நோய்களால் அவதிப்பட்டவர்களின் உடல் நிலை சீராகும். வரும் அக்டோபருக்குள், குழந்தைப் பாக்கியம் வேண்டியவர்களுக்கு நல்லதொரு குழந்தைப் பிறக்கும். மேலும், சனிப் பெயர்ச்சிக்குப் பின் சனி பகவான், ஆறாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக, திருமணத்தில் ஒரு சிலத் தடைகள் ஏற்படும்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சியினால், ராகுவினால், ஏற்படும் பாதிப்புகளும் குறையும். மேலும், 2020ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியினால், சனி பகவான் உங்கள் ராசிக்குப் ஏழாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். வெளியுலக் தொடர்பில் எச்சரிக்கைத் தேவை.

தொழில் முறை ஒப்பந்ததாரர்களுடன் அனுசரித்துச் செல்லவும். ஒப்பந்தங்களில், கையெழுத்திடும் பொழுது, சற்று கவனமுடன் இடவும். உங்கள் கணவன் அல்லது மனைவி, உங்களுடன் தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் சண்டையிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

பணவரவு இந்த ஆண்டும், தற்பொழுதுள்ள நிலையே நீடிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி ஆகியவை நன்றாகவே இருக்கும்.

ஆக மொத்தம், இந்த விகாரி ஆண்டு, உங்கள் கடக ராசிக்கு நூற்றுக்கு 82% நன்றாகவே உள்ளது. மேலும், பல நன்மைகள் நடக்க, முதலில் உங்கள் குல தெய்வத்தை வணங்கவும். பின்னர், சிவபெருமானையும், ராகு காலத்தில் துர்கை அம்மனையும் வணங்கி வர, வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.