வீட்டில் லெட்சுமி கடாட்சம் உண்டாக!

14 January 2020 சாஸ்திரம்
mahalakshmi11.jpg

சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது, வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு தான், தலை முழுக வேண்டும்.

துளசி மாடத்திலிருந்து, பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக் கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை, தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும்.

சுபகாரியங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல காரியங்களுக்கு சீட்டை எழுதும் போது முதலில் எழுதப்படுவது மஞ்சள் தான்.

மஞ்சள் பூசிக் குளிப்பது சுமங்கலிகள் மரபு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.

இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர, லஷ்மி கடாட்சமுண்டாகும்.

கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும். துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும்.

சூரியனால் உடலாரோக்கியம் பெற்று, அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து, விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று, சிவபிரானால் காமக் குரோதாதி புறப்பகைகளை வென்று, அஞ்ஞானம் நீக்கி, மோஷத்தை அடைவதற்கு, வாழ்வில் வரும் தடைகளை கணபதி அருளால் நீக்கி நற்கதி அடைவதே, பஞ்சாயதன பூஜைச் சிறப்பாகும்.

வீட்டில் ஏற்றும் விளக்கை, அடிக்கடி இடமாற்றம் செய்வது நல்லதல்ல. இதனால் லஷ்மிதேவி சஞ்சலமான நிலையைப் பெற்று, வீட்டிலுள்ளவர்களின் ஐஸ்வர்யங்களை ஏற்றத் தாழ்வுக்கு இடமாக்குவாள்.

தீபத்தின் ஜூவாலை கிழக்கு முகமாக இருந்தால், சர்வ பீஷ்டங்களும், ஐஸ்வரியமும் உண்டாகும். வடக்கு முகமாக எரிந்தால் நோய் நீங்கிச் சுகமுண்டாகும்.

மேல் நோக்கி நெடிதாயெரியும் ஜூவாலை, ஆரோக்கியத்திற்கும் சரீர சுக போகங்களுக்கும் அறிகுறியாகும்.

சக்தி, திறமை, வீர்யம் இவற்றைச் சகல ஜீவராசிகளுக்கும் வழங்கி, என்றும் மாறா இளமையுடன் திகழ்வது சூரியன். சூரிய வழிபாடு கர்மவினைகளையும், நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதியான தோஷங்களையும் நீக்கும்.

குழந்தைகள் பிறந்த பின் ஜாதகர்மம், நாமகரணம் என்பவற்றின் போது, உபநிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை சூரிய வெளிச்சம் படும்படி, முதன் முதல் வீட்குக்கு வெளியே கொண்டு வருதல் உண்டு. உடல் முழுதும் நல்லெண்ணய் பூசி வெற்றுடம்புடன் இளவெயிலில் கிடத்துதலும், குறிப்பிடத்தக்கது.

இல்லங்களில் மாலை நேரத்தில் விளக்கேற்றும் போது, பூஜையறை ஜன்னலை மூடி விட வேண்டும். வீட்டின் முன்புற வாசலை திறந்திருத்தலும், பின்பக்க வாசலை பூட்டியிருத்தலும் வேண்டும்.

வழிபாடு முடிந்த பின், விளக்குச் சுடர் மீது சில அட்சதை மணிகளைத் தூவி அல்லது மலரொன்றை வைத்து, மெதுவாக அணைத்து விடலாம். வீசி அணைத்தலும் ஊடு பற்றி எரிய விடுதலும் ஆகாது.

அரசமரம் வழிபாட்டுக்கு உகந்ததெனினும், சனிக்கிழமை காலை வேளையில் மட்டுமே அதைப் பிரதஷணம் செய்வதும், தொட்டு வணங்குவதும் செய்யலாம். அந்நாளில் மட்டுமே, லஷ்மி நாராயணரின் பிரசன்னம் அங்கு இருக்கும். மற்ற நாட்களில் தொடக் கூடாது.

சமுத்திர ஸ்நானம் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்யலாம்.