சனிப் பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் 2020-2022

13 January 2020 ராசிபலன்
viruchagam1

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! உங்கள் உங்கள் ராசிக்கு 3ம் இடத்திற்கும், 4ம் இடத்திற்கும் அதிபதியான சனி பகவான், வருகின்ற தை மாதம் 10ம் தேதியும், ஆங்கில வருடக் கணக்கின் படி ஜனவரி மாதம் 24 .1. 2020 ம் தேதி, காலை 9.57 மணிக்கு, திருக்கணித முறைப்படி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து, மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் 29.4.2022 காலை 7.53 மணி வரை, மகர ராசியில் இருக்க உள்ளார்.

11.5 2020 முதல் 29.9.2020 வரையிலும் 23.5.2021 முதல் 11.10.2021 வரையிலும் சனி வக்ரமாக இருப்பார். மேலும், 7.1. 2021 முதல் 10. 2 .2021 வரையிலும், 19.1.2022 முதல் 21.2.2022 வரையிலும் சனி பகவான் அஸ்தமனமாகிவிடுவார். சரி உங்கள் ராசிக்கு என்னப் பலன்கள் ஏற்படும் என்பது பற்றிப் பார்ப்போம்.

இந்த சனிப் பெயர்ச்சியின் காரணமாக, உங்களுடைய ஏழரைச் சனியானது முடிவடைகின்றது. இதனால், மாபெரும் மன நிம்மதி கிடைக்கும். புதிய மனிதராக நீங்கள் வலம் வர உள்ளீர்கள். உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் நான்காம் இடத்திற்கு அதிபதியான சனி பகவான், மூன்றாம் இடத்தில் ஆட்சியில் இருக்க உள்ளார். இதனால், இளைய சகோதரர்களுடன் இருந்து வந்தப் பிரச்சனைகள் நீங்கும். தைரியம் அதிகரிக்கும். செய்யும் முயற்சிகள் அனைத்திலும், சிறு சிறு தடைகளுக்குப் பிறகு நல்லதொரு வெற்றிக் கிடைக்கும். அதிர்ஷ்டத்தினை நம்பி உட்கார வேண்டாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உடலில் சக்தி அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்தப் பிரச்சனைகள் தீரும். தாயுடன் நல்ல உறவு நிலை நீடிக்கும். படிப்பில் இருந்து வந்தப் பிரச்சனைகள், தோல்விகள் நீங்கி நல்லதொரு வெற்றியினைப் பெறுவீர்கள். புதிய பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் முதலானவற்றை வாங்குவீர்கள். தோல்வி மனப்பான்மை நீங்குவதால், அதிரடி உழைப்பினை நீங்கள் காட்டுவீர்கள். உழைத்த உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும். பேச்சில் இனிமை தெரியும். கடன் பிரச்சனைகள் பெரும்பாலும் முடிந்து இருக்கும். எஞ்சியுள்ள கடன்களை எல்லாம் அடைத்து விடுவீர்கள். பூர்வ சொத்துக்கள் முதலானவை உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் இனி இருக்காது.

உங்கள் ராசிக்கு, மூன்றாம் இடத்தில் இருக்கும் சனி பகவான், உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம் மற்றும் பன்னிரெண்டாம் இடத்தினைப் பார்க்க உள்ளார். இதனால், குழந்தைப் பிறப்புத் தாமதம் ஆகும். குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறைத் தேவை. தொடர்ந்து குல தெய்வத்தினை வணங்குவது நல்லது. மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு விரும்பியப் பாடப்பிரிவு கிடைப்பதில் சிக்கல்கள் எழலாம். புதியதாக பெரிய அளவில் முதலீடுகளைச் செய்ய வேண்டாம். குழந்தைகளுடன் நீங்கள் மோதல் போக்கினைத் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்காலத்தினை நினைத்து நீங்கள் கவலைப்படுவீர்கள். அவர்களுக்கு வேலைக் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது தான் தற்பொழுது தேவை.

தந்தையின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அவருடன் எவ்வித வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். தந்தை வழி உறவினர்களுடன் பட்டும்படாமல் இருப்பது, அடுத்த இரண்டரை வருடங்கள் உங்கள் மன அமைதியினை காப்பாற்றும். தந்தையின் பேச்சுப் பிடிக்கவில்லை என்றாலும், அதனை பெரிதுபடுத்தாமல் இருப்பது மிகப் பெரிய அளவில் குடும்ப அமைதியினைக் காப்பாற்றும். புதிய சொத்துக்கள் சேர்ப்பதில் ஒரு சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். மாமனார், உங்கள் மனைவியின் சகோதரர்கள், சகோதரிகளின் பேச்சினை பெரிதுபடுத்த வேண்டாம்.

வாட்ஸ்ஆப், பேஸ்புக் சாட்டிங் மூலம் வில்லங்கம் உருவாகலாம். அண்டை அயலாருடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அவர்கள் மீது தவறு இருந்தாலும், அவர்களை மன்னித்து விட்டு விடுவது நல்ல பலன்களை வழங்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. நீங்கள் ஒழுங்காக சென்றாலும், எதிரில் வருபவர் உங்கள் மீது இடிக்கலாம். இருப்பினும், சனி நல்ல வலுவாக இருப்பதால், பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மூன்றில் சனி இருப்பது நல்ல அமைப்பாக இருப்பது நல்லது என ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.

தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். பெரிய அளவில் எதிலும் முதலீடுகளைச் செய்ய வேண்டாம். பணத்தினை நீங்கள் வீணாக செலவழிக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம். செலவுக்கு ஏற்ற வருமானம் இருக்கும் என்பதை மறக்கவும் வேண்டாம். உங்களுடைய முயற்சிகள் வெற்றியில் முடியும். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கைத் தேவை. பேசும் பொழுது, ஒரு முறைக்கு பல முறை யோசித்துப் பேசவும். பொது இடங்களில், அரசியல் பேசாமல் இருப்பது நல்லது.

இந்த முறை குழந்தைப் பாக்கியம் மட்டுமே, தடையாக இருக்க உள்ளது. எனவே, குழந்தைப் பாக்கியம் வேண்டும் விருச்சிக ராசியினர், திருப்பரங்குன்றம் சென்று சுப்பிரமண்யருக்கு பால் அபிஷேகம் செய்யவும். இராமேஷ்வரம் சென்று தீர்த்தத்தில் நீராடி வரவும். படிக்கின்ற குழந்தைகளுக்கு, முடிந்த வரை படிப்பதற்கு ஏற்ற உதவிகளை செய்யவும். குல தெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.

சனி பகவானின் பார்வையின் காரணமாக, கடன் தொல்லை தீரும். எதிரிகளின் தொல்லைகள் இருந்தாலும், அவர்களை எளிதாக வென்றுவிடுவீர்கள். உடல் நலத்தில் அக்கறைத் தேவை. தெரியாதவர்கள் தரும் உணவுகளை உண்ண வேண்டாம். தீராமல் நீண்ட நாட்களாக இருந்து வந்த சிறியக் கடன்களை அடைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வேலைத் தேடி அலைந்தவர்களுக்கு, அலைச்சலுக்குப் பின்னரே, நல்ல வேலைக் கிடைக்கும். செய்து வரும் வேலையை விட்டுவிட வேண்டாம். வேலையில் மாற்றம் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

வேலை விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். வேலைப் பார்க்கும் இடங்களில் அனுசரித்துச் செல்வது நல்லது. செய்கின்ற வேலையை விட்டுவிட்டால், அடுத்த இரண்டரை ஆண்டுகள், வேலைத் தேடுவதையே வேலையாக கொண்டிருக்க வேண்டி இருக்கும். எனவே, சற்று பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. மேலதிகாரிகள், உங்களுடன் கடுமையாக நடந்து கொள்வார்கள். எனவே, அவர்களின் பேச்சுக்கு ஏற்றவாறு அனுசரித்துச் செல்லவும். மாமியாரின் ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். அவர்கள் மூலம், உதவிகள் உங்களுக்கு பெரிய அளவில் நிம்மதி அளிக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள், தொடர்ந்து முயற்சிக்க வேண்டி இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் வேலையையும் சேர்த்து, நீங்களேப் பார்க்க வேண்டி இருக்கும்.

புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன், உங்கள் சுய ஜாதகத்தினை சரிபார்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில், சனியின் பார்வையில், உங்கள் ராசியானது உள்ளது. இதனால், நீங்கள் எதைச் செய்தாலும், தடைகள், தாமதங்கள், மன உளைச்சல்கள் முதலானவை உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, எதைச் செய்தாலும் யோசித்து செயல்படுவது நன்மை அளிக்கும். சனி பகவான் உங்கள் ராசியில் தான் உச்சம் அடைவார். எனவே, பெரிய அளவிலானப் பிரச்சனைகளோ, தடைகளோ இல்லாமல் ஓரளவு நீங்கள் சமாளிக்கும் அளவில் இருக்கும். கணவன் மற்றும் மனைவி விஷயத்தில், நீங்கள் தான் விட்டுக் கொடுத்துச் செல்லும்படி இருக்கும்.

சனிப் பெயர்ச்சி மூலம் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, தாய் ஸ்தானத்தில் உள்ளவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களைத் தலையிட அனுமதிக்க விட வேண்டாம். சனிக்கிழமை அன்று, நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி, சனிபகவானை வழிபட வேண்டும். குல தெய்வ வழிபாடு கஷ்டம் இல்லாமல் வாழ உதவும்.