மீனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

24 October 2019 ராசிபலன்
meenam.jpg

குரு பகவான் வரும் தீபாவளிக்கு அடுத்த நாள், அதாவது அக்டோபர் 28ம் தேதி அம்மாவாசை அன்று, சுவாதி நட்சத்திர நாளில் இந்தப் பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து, தன்னுடைய முதல் சொந்த வீடான மீனம் ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

அனைத்து உயிர்களுக்கும் சகல மங்கலத்தை அருளும் குரு பகவான், இந்த முறை தன்னுடைய சொந்த வீட்டிற்குச் செல்வது மாபெரும் நன்மையாகும். அவ்வாறு செல்லும் குரு பகவான், தன்னுடைய ஐந்தாம் பார்வையாக மேஷத்தையும், ஏழாம் பார்வையாக மிதுனத்தையும், ஒன்பதாம் பார்வையாக சிம்மத்தையும் பார்க்கின்றார்.

மீனம் ராசியில் சனீஸ்வரன் மற்றும் கேது பகவானுடன் இணையும் குரு பகவான், அங்கு குரு சண்டாள யோகத்தினை உருவாக்குகின்றார். அங்கிருந்து கொண்டு, தன்னுடைய ஏழாம் பார்வையாக, ராகு பகவானைப் பார்க்கின்றார். இதன் காரணமாக, ராகு சுபத் தன்மை அடைகின்றார். இதனால், இதுவரை, அனைவருக்குமே, சங்கடத்தையும், கஷ்டங்களையும் வழங்கி வந்த ராகு பகவான், குருப் பெயர்ச்சிக்குப் பின், 50% நன்மைகளை வழங்க ஆரம்பிப்பார்.

ஜனவரி 24ம் தேதி, சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதற்குப் பின், சனி பகவானும், தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அதன் காரணமாக, அவருடையப் பார்வை, ராகுவின் மீதிருந்து விலகிவிடும். அப்பொழுதில் இருந்து 2020ம் ஆண்டு முடியும் வரை, ராகு பகவான் 100% சுபத் தன்மை அடைந்து, தன்னுடைய முழு அதிர்ஷ்டத்தையும், எளிய வழிகளையும், குறுக்கு வழிகளையும் காட்டி, வாழ்வில் பல வளர்ச்சிகளை ஏற்படுத்துவார். இது அடுத்த நடக்க இருக்கும், ராகு-கேது பெயர்ச்சி வரை நீடிக்கும்.

சனி பகவான் ஜனவரி 24ம் தேதி தன்னுடைய முதல் ஆட்சி வீடான, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். அங்கிருந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையை மீன ராசியின் மீதும், ஏழாம் பார்வையை கடக ராசியின் மீதும், 10ம் பார்வையை மீனம் ராசியின் மீதும் பதிக்கின்றார். இதனால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.

குரு பகவானை அதிபதியாகக் கொண்ட, மீன ராசி அன்பர்களே! அமைதியான மனதிற்கும், அன்பான பேச்சிற்கும் கொண்ட உங்கள் ராசிக்கு, இந்த குருப் பெயர்சிக்குப் பின், என்ன பலன்களை நீங்கள் அடைவீர்கள் என்பதை பார்ப்போம்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின், தன்னுடைய சொந்த வீடான தனுசு ராசிக்கு குரு பகவான், பெயர்ச்சி அடைகிறார். முதலில் நாம் இந்தக் குருப் பெயர்ச்சியை, இரண்டு கட்டங்களாகப் பிரித்துப் பார்ப்போம். முதலில், அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை. மற்றொன்று ஜனவரி 24க்கு பின்.

இவை இரண்டிற்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. இவை இரண்டுமே, மாபெரும் மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் உண்டாக்கும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.

அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை

இந்தக் காலக் கட்டத்தில், குரு பகவான், தன்னுடைய தனுசு ராசியில் நுழைகின்றார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தினை உண்டு பண்ண உள்ளார். அவர் அங்கிருந்து, மேஷம், மிதுனம் மற்றும் சிம்மம் ஆகிய வீடுகளைப் பார்ப்பார்.

சனி மற்றும் குரு பகவான் ஆகியோர் இணைந்து இருப்பது, பெரிய அளவில் ஆன்மீக ஈடுபாட்டினை அதிகரிக்கும். முதலில் நீங்கள் கடந்த மார்ச் முதல் மே 15 வரை என்னென்ன நடந்தது, நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவைகள் பெரும்பாலும், மீண்டும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் எதனையும் ஆரம்பிக்கக் கூடாது. காரணம், நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில், எதையாவது ஆரம்பித்தால், அது பெரிய அளவில் வளர்ச்சி பெறும். நீங்களும், மேலும், அதில் முதலீடு செய்வீர்கள். அதுவும் பெரிய அளவில் வளரும் பொழுது, உங்களுடைய மனநிலையின் காரணமாக, நீங்கள் அதனைக் கைவிடும் நிலைமை உண்டாகும்.

இதன் காரணமாகவே, இந்தக் காலக் கட்டத்தில் யாரும், எதையும் ஆரம்பிக்கக் கூடாது. மேலும், இந்தக் காலக் கட்டத்தில் அதிர்ஷ்டம் என்பது 50% மட்டுமே வேலை செய்யும். மீதி 50% வாய்ப்புகள் சனிபகவான் உழைப்பாக மாற்றிவிடுவார். உழைத்த உழைப்புக்கேற்றப் பலன்களைப் பெற வேண்டும் என்றால், இறையருள் வேண்டும். மேலும், சனி, கேதுவுடன் இணைந்திருக்கும் குரு, ராகுவின் பார்வையையும் பெறுவதால், இந்தக் காலக் கட்டத்தில் அனைவருமே, கோவிலுக்குச் சென்று புண்ணியங்களை செய்வது நல்லது.

ராகு பகவான், உங்கள் ராசிக்கு 4ல் இருக்கின்றார். இதனால், தாயின் உடல்நலத்தில் அக்கறைத் தேவை. தாயுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது, சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். விபத்துக்களைத் தவிர்க்க, வாரம் ஒரு முறை துர்க்கை அம்மனை வணங்கி வரவும். ஒரு சிலருக்கு பாம்புகளைப் பார்க்கும் வாய்ப்புகள் உண்டாகும்.

இந்த குருப் பெயர்ச்சிக்குப் பின், குரு பகவான் தனுசி ராசிக்குப் பெயர்ச்சி வருகிறார். இதன் காரணமாக, ராகுவால் ஏற்பட்ட பிரச்சனைகள் 50% நீங்கும். இருப்பினும், சனியின் பார்வையில் இருப்பதால், ராகுவால் அள்ளித் தர இயலாது.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 10ல் இருந்து கொண்டு, அவர் நேராக, உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தையும், 4ம் இடத்தையும், 6ம் இடத்தையும் பார்க்க உள்ளார். இந்தப் பார்வைகள், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளத் தடைகளை நீக்கும்.

குரு பகவான், சனி மற்றும் கேதுவுடன் இணைந்து இருக்கின்றார். குரு தன்னுடைய சொந்த வீட்டில் இருந்தாலும், இரண்டு இருள் கிரகங்களுடன் சேர்ந்து இருக்கின்றார். இதன் காரணமாக, தன்னுடைய பலத்தை அவர்களுக்கு வழங்கி, அவர்கள் மூலம் ஏற்பட்ட கஷ்டங்களைத் தீர்ப்பார். உடல்நலம் நன்றாகவே இருக்கும். கடன்களை அடைக்க வழிகள் உண்டாகும்.

சனி பகவான் குரு பகவானுடன் இணைந்து இருப்பதால், திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குரு பகவான், ராகு பகவானைப் பார்ப்பதனால், குரு சண்டாள யோகத்தினை உண்டாக்குகின்றார். சனி பகவான் தொடர்ந்து, கடன் பிரச்சனைகளின் மூலம் ஏற்படும் கஷ்டத்தை உங்களுக்கு உணர்த்தியிருப்பார்.

இந்த ஜனவரி 24 அன்று தனுசு ராசியில் இருந்து, தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். இதனால், இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த மறைமுகமானக் கஷ்டங்கள் ஒரு முடிவிற்கு வரும்.

ஜனவரி 24க்குப் பின்

ஜனவரி 24 அன்று, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அவர் உங்கள் ராசிக்கு 11 மற்றும் 12ம் இடத்திற்கு அதிபதி ஆவார். அவர் 11ம் இடத்தில் ஆட்சியில் இருக்கிறார். இதனால், தொழிலில் இருந்து வரும் லாபம் சுமாராக இருக்கும். அதற்காக, நீங்கள் நேர்மையற்ற வழிகளில் செல்ல வேண்டாம். அது உங்களுக்கு ஆபத்தையே ஏற்படுத்தும். மூத்த சகோதரர்களுடன் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து சனி பகவான், மகரத்தில் இருந்து கொண்டு மீனம், கடகம் மற்றும் துலாம் ராசிகளைப் பார்க்கின்றார். பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும். முகத்தில் காயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தந்தையின் உடல்நலத்தில் அக்கறைத் தேவை. ஒரு சில சமயம் விரக்தியான மனநிலைத் தோன்றலாம்.

குரு பகவான் உங்கள் ராசிக்கும் மற்றும் 10ம் இடத்திற்கு அதிபதி ஆவார். அவர், 10ம் இடத்தில் ஆட்சி அமைக்கின்றார். இதனால், தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். வேலைத் தேடி அலைந்தவர்களுக்கு, நல்ல வேலைக் கிடைக்கும். ஒரு முறை மகாலட்சுமியை கோவிலுக்குச் சென்று, மனதார வணங்கி வாருங்கள். முடிந்தால், பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப சந்தோஷத்திற்குக் குறைவிருக்காது. தாயுடன் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் நகைகள் வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். கேட்ட இடத்தில் இருந்து, வேண்டிய அளவிற்கான கடன்கள் கிடைக்கும். உடலில் இருந்து வந்த நோய்கள் தீரும்.

தனுசில் இருக்கும் குரு பகவான், கேது பகவானுடன் இணைந்து இருக்கின்றார். இதன் காரணமாக, தொடர்ந்து ஆன்மீகப் பயணங்களில் ஈடுபடுதல், கோவில்களுக்குச் செல்லதல், புனித யாத்திரைகள் முதலானவற்றில் ஈடுபாடு ஏற்படும்.

தனுசு ராசியில் இருக்கும் குரு பகவான், ராகு பகவானைப் பார்த்து தொடர்ந்து, குரு சண்டாள யோகத்தை உண்டாக்கி கொண்டே இருக்க உள்ளார். இதன் காரணமாக, அதிர்ஷ்டம் தேடி வரும். அவர் உங்கள் ராசிக்கு 4ல் இருக்கின்றார். இதனால், அவர் இதுவரை தாயுடன் தொந்தரவு மற்றும் பிரச்சனைகள் தந்து கொண்டு இருந்தார். இனி, உங்கள் தாயின் மூலமே பல நன்மைகள் உண்டாகும். தாயின் சொத்துக்கள் ஒரு சிலருக்குக் கிடைக்கலாம்.

ஜனவரி 24 வரை, குறைந்த பலத்துடன் இருந்து வந்த ராகு, ஜனவரி 24க்குப் பின், முழு சுப பலத்துடன், உங்களுக்கு பல நன்மைகளை வழங்குவார். அதுவும் குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் இருந்து, மிக அதிக அளவில் நன்மைகளை வழங்கி, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து விடுவார்.

ஆக மொத்தம், இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் துலாம் ராசிக்கு, நூற்றுக்கு 90% நன்மைகள் மட்டுமே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க, விநாயகர் மற்றும் தெட்சிணாமூர்த்தியை தொடர்ந்து வணங்கவும். மறக்காமல், குல தெய்வ வழிப்பாட்டினை மேற்கொள்வது நல்லது.