மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020!

24 October 2019 ராசிபலன்
magaram.jpg

குரு பகவான் வரும் தீபாவளிக்கு அடுத்த நாள், அதாவது அக்டோபர் 28ம் தேதி அம்மாவாசை அன்று, சுவாதி நட்சத்திர நாளில் இந்தப் பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து, தன்னுடைய முதல் சொந்த வீடான மகரம் ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

அனைத்து உயிர்களுக்கும் சகல மங்கலத்தை அருளும் குரு பகவான், இந்த முறை தன்னுடைய சொந்த வீட்டிற்குச் செல்வது மாபெரும் நன்மையாகும். அவ்வாறு செல்லும் குரு பகவான், தன்னுடைய ஐந்தாம் பார்வையாக மேஷத்தையும், ஏழாம் பார்வையாக மிதுனத்தையும், ஒன்பதாம் பார்வையாக சிம்மத்தையும் பார்க்கின்றார்.

மகரம் ராசியில் சனீஸ்வரன் மற்றும் கேது பகவானுடன் இணையும் குரு பகவான், அங்கு குரு சண்டாள யோகத்தினை உருவாக்குகின்றார். அங்கிருந்து கொண்டு, தன்னுடைய ஏழாம் பார்வையாக, ராகு பகவானைப் பார்க்கின்றார். இதன் காரணமாக, ராகு சுபத் தன்மை அடைகின்றார். இதனால், இதுவரை, அனைவருக்குமே, சங்கடத்தையும், கஷ்டங்களையும் வழங்கி வந்த ராகு பகவான், குருப் பெயர்ச்சிக்குப் பின், 50% நன்மைகளை வழங்க ஆரம்பிப்பார்.

ஜனவரி 24ம் தேதி, சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ளது. அதற்குப் பின், சனி பகவானும், தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அதன் காரணமாக, அவருடையப் பார்வை, ராகுவின் மீதிருந்து விலகிவிடும். அப்பொழுதில் இருந்து 2020ம் ஆண்டு முடியும் வரை, ராகு பகவான் 100% சுபத் தன்மை அடைந்து, தன்னுடைய முழு அதிர்ஷ்டத்தையும், எளிய வழிகளையும், குறுக்கு வழிகளையும் காட்டி, வாழ்வில் பல வளர்ச்சிகளை ஏற்படுத்துவார். இது அடுத்த நடக்க இருக்கும், ராகு-கேது பெயர்ச்சி வரை நீடிக்கும்.

சனி பகவான் ஜனவரி 24ம் தேதி தன்னுடைய முதல் ஆட்சி வீடான, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். அங்கிருந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையை மீன ராசியின் மீதும், ஏழாம் பார்வையை கடக ராசியின் மீதும், 10ம் பார்வையை மகரம் ராசியின் மீதும் பதிக்கின்றார். இதனால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.

சனி பகவானை அதிபதியாகக் கொண்ட, மகர ராசி அன்பர்களே! கடின உழைப்புக்கும், அமைதிக்கும் அதிபதியான உங்கள் ராசிக்கு, இந்த குருப் பெயர்சிக்குப் பின், என்ன பலன்களை நீங்கள் அடைவீர்கள் என்பதை பார்ப்போம்.

அக்டோபரில் நடக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின், தன்னுடைய சொந்த வீடான தனுசு ராசிக்கு குரு பகவான், பெயர்ச்சி அடைகிறார். முதலில் நாம் இந்தக் குருப் பெயர்ச்சியை, இரண்டு கட்டங்களாகப் பிரித்துப் பார்ப்போம். முதலில், அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை. மற்றொன்று ஜனவரி 24க்கு பின்.

இவை இரண்டிற்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. இவை இரண்டுமே, மாபெரும் மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் உண்டாக்கும் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை.

அக்டோபர் 28 முதல் ஜனவரி 24 வரை

இந்தக் காலக் கட்டத்தில், குரு பகவான், தன்னுடைய தனுசு ராசியில் நுழைகின்றார். அங்கு கேது மற்றும் சனி பகவானுடன் இணைந்து குரு சண்டாள யோகத்தினை உண்டு பண்ண உள்ளார். அவர் அங்கிருந்து, மேஷம், மிதுனம் மற்றும் சிம்மம் ஆகிய வீடுகளைப் பார்ப்பார்.

சனி மற்றும் குரு பகவான் ஆகியோர் இணைந்து இருப்பது, பெரிய அளவில் ஆன்மீக ஈடுபாட்டினை அதிகரிக்கும். முதலில் நீங்கள் கடந்த மார்ச் முதல் மே 15 வரை என்னென்ன நடந்தது, நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவைகள் பெரும்பாலும், மீண்டும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் எதனையும் ஆரம்பிக்கக் கூடாது. காரணம், நீங்கள் இந்தக் காலக் கட்டத்தில், எதையாவது ஆரம்பித்தால், அது பெரிய அளவில் வளர்ச்சி பெறும். நீங்களும், மேலும், அதில் முதலீடு செய்வீர்கள். அதுவும் பெரிய அளவில் வளரும் பொழுது, உங்களுடைய மனநிலையின் காரணமாக, நீங்கள் அதனைக் கைவிடும் நிலைமை உண்டாகும்.

இதன் காரணமாகவே, இந்தக் காலக் கட்டத்தில் யாரும், எதையும் ஆரம்பிக்கக் கூடாது. மேலும், இந்தக் காலக் கட்டத்தில் அதிர்ஷ்டம் என்பது 50% மட்டுமே வேலை செய்யும். மீதி 50% வாய்ப்புகள் சனிபகவான் உழைப்பாக மாற்றிவிடுவார். உழைத்த உழைப்புக்கேற்றப் பலன்களைப் பெற வேண்டும் என்றால், இறையருள் வேண்டும். மேலும், சனி, கேதுவுடன் இணைந்திருக்கும் குரு, ராகுவின் பார்வையையும் பெறுவதால், இந்தக் காலக் கட்டத்தில் அனைவருமே, கோவிலுக்குச் சென்று புண்ணியங்களை செய்வது நல்லது.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு 6ல் இருக்கின்றார். இதனால், நீங்கள் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, அதிக லாபம் அடைவீர்கள். ஒரு சிலருக்கு உடல்நலத்தில் பிரச்சனைகள் இருக்கும். இந்த குருப் பெயர்ச்சிக்குப் பின், குரு பகவான் தனுசி ராசிக்குப் பெயர்ச்சி வருகிறார். இதன் காரணமாக, ராகுவால் ஏற்பட்ட பிரச்சனைகள் 50% நீங்கும். இருப்பினும், சனியின் பார்வையில் இருப்பதால், ராகுவால் அள்ளித் தர இயலாது.

குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ல் இருந்து கொண்டு, அவர் நேராக, உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தையும், 6ம் இடத்தையும், 8ம் இடத்தையும் பார்க்க உள்ளார். இந்தப் பார்வைகள், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளத் தடைகளை நீக்கும்.

குரு பகவான், சனி மற்றும் கேதுவுடன் இணைந்து இருக்கின்றார். குரு தன்னுடைய சொந்த வீட்டில் இருந்தாலும், இரண்டு இருள் கிரகங்களுடன் சேர்ந்து இருக்கின்றார். இதன் காரணமாக, தன்னுடைய பலத்தை அவர்களுக்கு வழங்கி, அவர்கள் மூலம் ஏற்பட்ட கஷ்டங்களைத் தீர்ப்பார். உடல்நலம் நன்றாகவே இருக்கும். கடன்களை அடைக்க வழிகள் உண்டாகும்.

சனி பகவான் குரு பகவானுடன் இணைந்து இருப்பதால், திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். குரு பகவான், ராகு பகவானைப் பார்ப்பதனால், குரு சண்டாள யோகத்தினை உண்டாக்குகின்றார். சனி பகவான் தொடர்ந்து, கடன் பிரச்சனைகளின் மூலம் ஏற்படும் கஷ்டத்தை உங்களுக்கு உணர்த்தியிருப்பார்.

இந்த ஜனவரி 24 அன்று தனுசு ராசியில் இருந்து, தன்னுடைய சொந்த வீடான மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். இதனால், இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த மறைமுகமானக் கஷ்டங்கள் ஒரு முடிவிற்கு வரும்.

ஜனவரி 24க்குப் பின்

ஜனவரி 24 அன்று, சனி பகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். உங்கள் ராசிக்கு ஏழரைச் சனியினை தீவிரமாக்கும் அமைப்பாகும். பயப்பட வேண்டாம். உங்கள் ராசிக்கும், ராசிக்கு இரண்டாம் இடத்திற்கும் அதிபதியான சனி பகவான், உங்கள் ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார். மகரத்தில் இருந்து கொண்டு அங்கிருந்து மீனம், கடகம் மற்றும் துலாம் ராசிகளைப் பார்க்கின்றார்.

சனி பகவான் பெயர்ச்சிக்குப் பின், நீங்கள் செய்ய வேண்டியவைகளைப் பற்றி முதலில் பார்ப்போம். நீங்கள் பெரிய அளவில் முதலீடுகளை செய்ய வேண்டாம். ஏனெனில், 12க்குரியவர் ஆட்சி பெறுகிறார். மேலும், அவர் மூன்றாம் இடத்திற்கும் அதிபதி ஆவார். மகர ராசியில் இருந்து கொண்டு, சனி பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தையும், ஏழாம் இடத்தினையும் மற்றும் பத்தாம் இடத்தினையும் பார்க்கின்றார். இவை சம்பந்தமான, விஷயங்களினாலேயேப் பிரச்சனைகள் வரும். தொழிலில் இருப்பவர்கள், தொழிலை மாற்ற வேண்டாம். வேலையைத் தேடுபவர்களுக்கு, கொஞ்சம் அலைச்சல் ஏற்படலாம். தைரியமாக எதையாவது செய்கிறேன் என்று பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். திருமணப் பிரச்சனை, கணவன் மற்றும் மனைவியிடையேப் பிரச்சனை முதலியவற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இதனைப் பற்றி, பின்னர் பார்ப்போம்.

தனுசில் இருக்கும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 12ம் இடத்திற்கும் மற்றும் மூன்றாம் இடத்திற்கும் அதிபதி ஆவார். அவர் உங்கள் ராசிக்கு 12ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். இதனால், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், வீடு, மனை வாங்கும் பாக்கியம் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை. இளைய சகோதரர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். தேவையில்லாமல், பெரிய கடன்களை வாங்க வேண்டாம். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, எச்சரிக்கையுடன் எதையும் செய்யவும். உங்களை பயமுறுத்துவதற்காக இதனைச் சொல்லவில்லை. மாறாக இதனை நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டால், எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளில் இருந்து, எளிதாக தப்பிக்கலாம். உடல் நலம் நன்றாகவே இருக்கும். தொடர்பு சிவ ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ளவும்.

தனுசு ராசியில் இருக்கும் குரு பகவான், ராகு பகவானைப் பார்த்து தொடர்ந்து, குரு சண்டாள யோகத்தை உண்டாக்கி கொண்டே இருக்க உள்ளார். இதன் காரணமாக, அதிர்ஷ்டம் தேடி வரும். அவர் உங்கள் ராசிக்கு 6ல் இருக்கின்றார். இதனால், அவர் இதுவரை கொடுத்து வந்த தொந்தரவுகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். மேலும், வருமானத்தை அதிகப்படுத்துவதில், உங்களை ஈடுபடுத்துவார். எளிய வழிகளை காண்பித்து வெற்றிப் பெற வைப்பார். தொடர்ந்து நேர்மையான வழியில் செல்லவும்.

ஜனவரி 24 வரை, குறைந்த பலத்துடன் இருந்து வந்த ராகு, ஜனவரி 24க்குப் பின், முழு சுப பலத்துடன், உங்களுக்கு பல நன்மைகளை வழங்குவார். அதவும் குறிப்பாக, ஏப்ரல் மாதத்தில் இருந்து, மிக அதிக அளவில் நன்மைகளை வழங்கி, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்து விடுவார்.

குரு, கேது பகவானுடன் இணைந்து 12ம் இடத்தில் இருப்பதால், நீங்கள் ஆன்மீகப் பயணங்களையும், குல தெய்வ வழிபாட்டினையும் தொடரும் வாய்ப்புகள் உண்டாகும். மனதில், தொடர்ந்து தெய்வத்தை வைத்து இருக்கவும். தீர்த்த யாத்திரைகள், மலைகளில் இருக்கும் கோவில்கள் ஆகியவைகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் பிரமாதமாக உள்ளன.

ஆக மொத்தம் இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் மகர ராசிக்கு, நூற்றுக்கு 71% நன்மைகள் மட்டுமே நடக்கும். மேலும், பல நன்மைகள் நடக்க, சிவ பெருமான் மற்றும் ஆஞ்சநேயரை தொடர்ந்து வணங்கவும். மறக்காமல், குல தெய்வ வழிப்பாட்டினை மேற்கொள்வது நல்லது.