சிவனின் 3 மகள்கள் யார்? என்றும் அவர்களின் பிறப்பின் ரகசியங்களும் தெரியுமா?

24 October 2019 சாஸ்திரம்

அழிக்கும் கடவுளான சிவனை பற்றி, நாம் அறிந்தது மிகவும் குறைவு தான். ஏனெனில் பெரும்பாலானவர்கள் அறிந்தது சிவபெருமானுக்கு, மூன்று மகன்கள் இருக்கிறார்கள் என்பதுதான். ஆனால் அது உண்மையல்ல. ஆம், சிவனுக்கு கார்த்திகேயன், கணேசன் மற்றும் ஐயப்பன் மட்டுமின்றி, மூன்று மகள்களும் இருக்கிறார்கள். சிவபெருமானின் மகன்கள் அளவிற்கு, அவரின் மகள்கள் புகழ் பெறவில்லை. ஆனால், இந்தியாவின் பல மூலைகளில் அவர்களை இன்னும், வழிபடுகின்றனர்.

சிவபெருமானின் மகள்கள்

சிவனின் மகள்களின் பெயர்கள் அசோக சுந்தரி, ஜோதி மற்றும் வாசுகி. இந்த தகவல் பலருக்கும் அறியாத ஒன்று. ஆனால் இதற்கான குறிப்புகள் சிவபுராணத்திலும், வேறு சில புராணங்களிலும் உள்ளது. அவற்றின் படி, இவர்களின் ஒவ்வொருவரின் பிறப்பிற்குப் பின்னால், ஒரு சுவாரசியமான கதை இருக்கின்றது.

அசோக சுந்தரி

சிவன் மற்றும் பார்வதியின் முதல் மகள், அசோக சுந்தரி ஆவார். இவரை பற்றிய விரிவான குறிப்புகள் பத்ம புராணத்தில் உள்ளது. அதன்படி பார்வதி தேவி தன் தனிமையை போக்கி கொள்வதற்காகவே, அசோக சுந்தரியை உருவாக்கினார். அவரின் பெயர் காரணம் என்னவெனில், தனது சோகத்தை போக்க உருவாக்கப்பட்டதாலும், மிகவும் அழகாக இருந்ததாலும், அவருக்கு அசோக சுந்தரியென்று, பெயர் சூட்டினார். இவர், குஜராத்தில் எல்லோராலும் வணங்கப்படுகிறார். இந்தியாவின் மற்ற பகுதிகளில், இவரை பற்றி யாரும் அறியவில்லை.

ஜோதி

சிவனின் இரண்டாவது மகள் ஜோதி. அவரின் பெயரே, அதன் பொருளை விளக்குகிறது. இவர் ஒளியின் கடவுளாக, அனைத்து கோவில்களிலும் வணங்கப்படுகிறார். ஜோதியின் பிறப்பிற்கு பின், இரண்டு கதைகள் உள்ளது. முதல் கதை என்னவென்றால், அவர் சிவனின் ஒளிவட்டத்திலிருந்து, பிறந்தார் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது கதை என்னவெனில், ஜோதி பார்வதி தேவியின் நெற்றியில் இருந்து, வெளிப்பட்ட தீப்பொறியிலிருந்து, உருவானவர் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டில் எது உண்மையென்று, யாருக்கும் தெரியாது. இந்த ஜோதியானவர், ஜுவாலாமுகி என்ற பெயரால், தமிழ்நாடு முழுவதும் பல கோவில்களில், வணங்கப்படுகிறார்.

வாசுகி

வாசுகி என்பவர், அனைத்து கோவில்களிலும் பாம்புக்கடியை குணமாக்கும் கடவுளாக, கும்பிடப்படுகின்றார். இவர் சிவபெருமானின் மகள் ஆனால், பார்வதியின் மகள் இல்லை. ஏனெனில், பாம்புகளின் கடவுளான கத்ரு, செதுக்கிய சிலையின் மீது, சிவபெருமானின் உயிரணுக்கள் விழுந்ததால், வாசுகி பிறந்தார். அதனால் தான் அவர் சிவனின் மகளாகவும், பார்வதியின் மகள் இல்லை என்றும், கூறப்படுகிறது. சிவபெருமான், ஆலகால விஷத்தை குடித்த போது, அவரை காப்பாற்றியது வாசுகிதான். இவருக்கு மானசா, என்ற ஒரு பெயரும் உள்ளது.

இவரின் அதீத கோபத்தால், இவர் தன் தந்தை சிவன், பார்வதி, கணவர் என அனைவராலும் ஒதுக்கப்பட்டார். இவர், மேற்கு வங்கத்தில் மிகவும் பிரபலமாக, வணங்கப்படுகிறார். மேலும், இவர் பார்வதி தேவியை எப்பொழுதும், வெறுத்துக் கொண்டே இருந்தார். இவருக்கென, எந்தவித உருவமும் கிடையாது ஆனால், பாம்பின் வடிவத்தில் வணங்கப்படுகிறார். இவர் பாம்புக்கடி மற்றும் அம்மை நோய்களை குணப்படுத்தக் கூடியவர், என்று நம்பப்படுகிறது.